Sunday, May 26, 2013

இனியும் தாமதியாதே பெண்ணே



மேண்மை பெற்ற ஆண்கள் மத்தியிலே
சிறுமை உள்ளம்
கொண்ட கள்ளிசெடிகளும் 

இருப்பது  இயற்க்கையடி பெண்ணே
கலங்காதே
மூலையில் முடங்காதே தூற்றுவோரை கண்டு
துயர்கொள்ளதே
துணிந்துநில்

முடக்கிவிட்டதாய்
மீசைமுறுக்குவோர் முன்னே
சாதனைகள் படைத்திடு
சரித்திர ஏட்டிலே
உன் பெயரையும்
பதித்திடு
பெண்ணே
உனை தூற்றுவூர் சிலர்தான்
போற்றுவூர்
தரணியெங்கும் உள்ளனர்
தயக்கத்தை உடைத்திடு
காற்றுபுக இடைவெளியும்
உன் கால்பதிக்க காத்திருக்கிறது
இனியும்
தாமதியாதே

காதலுடன்
பூங்குழலி

No comments:

Post a Comment