Sunday, May 26, 2013

தோழி நின் நினைவில்



சேற்றில் சிக்கிய களிறெனவே
தவிக்கிறேனடி தோழி
நின் நினைவில்

காடுமலை சோலைதனில்
காற்றாக கரம்பிடித்து
மயிலோடு ஜோடி சேர்ந்து நடமாடி
வென்றோமே நினைவிருக்கா
.??

நந்தவன மலர்பறித்து அதைபோலே
உனைதாங்க நல்லான் ஒருத்தன்
நாதனாய் வர
உனக்கு நானும் எனக்கு நீயும்
வேண்டி நின்று.. நாராயணனின் பாதம்
பணிந்தோமே நினைவில்லையா
..??

அருவிக்கரையோர கயலெல்லாம்
என் நிலைகண்டு கலங்குதடி என் தோழி
நாம் நின்ற இடம், நடந்த இடமெல்லாம்
நம் நினைவுகளை சுமந்த படி
நிற்குதடி என் தோழி

வில்லென்ற விழியினிலே நீரோடு
மணமாலை சுமந்து போனவளே
..!!

அரசமரத்தடி குயிலும் இசைபாட மறந்ததடி
மாமரத்து வண்டும் சப்தமின்றி போனதடி
..!!
விடியலிலே கண்ட கனா பலிக்கும் என்றே
நம் இறந்த காலம் சென்று பார்கிறேன்
கண்டதிலே நாலிலே ஒன்றிரண்டு
பலித்திடாதா என் அன்பு தோழி

காதலுடன் பூங்குழலி !!!!
 

No comments:

Post a Comment