Monday, December 24, 2012

மையல் கொள்ள எண்ணமும் இல்லை...

நீயின்றி யாரிடமும் மையல்
கொள்ள எண்ணமும் இல்லை...





உனையன்றி யாரிடமும் என்
மனம் கொடுக்க ஆசையில்லை

நீயின்றி யாரிடமும் மையல்
கொள்ள எண்ணமும் இல்லை

நீ வரும் வரை காத்திருப்பேன்
உன் உயிர் சுமக்க என் உயிர் கொடுத்து

என் கூந்தலின் மணம் உன் மார்பை
மட்டும் சேரவேண்டும் என்று
தலையணை இல்லாமல் உறங்குகிறேன்

நீ தலை சாய்த்து ஓர் ஓர பார்வை பார்க்கும் பொழுது எல்லாம் நான் விரும்பியே உன்னுள் என்னை தொலைத்து விடுகிறேன்

பூக்கும் பூவாய் என்னை தழுவும் கற்றாய்
உன் மீதான என் காதல் வளர்ந்து கொண்டே இருக்கிறது

என்ன செய்ய உடனே என்னுள் உன்னை புதைத்துவிடு
இல்லையெனில் என்னை மண்ணில் புதைத்துவிடு

நான் எழுதும் எல்லா வார்த்தைகளிலும்
நீ வந்து நிரம்பிவிடுகிறாய் நீ இல்லையெனில்
என் கவிதை மட்டுமல்ல நானும்
இல்லை

மறுதலித்து ஓர் வார்த்தை சொல்லிவிடு
இன்றே நாங்கள் மரிக்க தயார்

காதலுடன்
பூங்குழலி

1 comment:

  1. நாங்கள் மரிக்க தயார் ! ! ! good words

    ReplyDelete