உம்
சொல்லடி பட்டு சிதறி கிடக்கும்
எம்
மனக்கண்ணாடிகளெல்லாம்
உம்
பிம்பத்தையே பிரதிபலிகிறது
வேர்பிடித்து
ஊன்றி விட்ட நம் நேசத்தை
வெட்டிவிட
வழியின்றி தவிக்கிறேன் ...!!
நெளிந்தோடும்
நதியலை போலே
எமக்குள்ளே
வளைந்தோடும் உம் நினைவுகள் எனை
நித்திரையின்றி
நெருப்பிலிட்டு கொண்டிருகிறது ...!!
காதலெனும்
மத்து கொண்டு எனை கடைந்து
எம்
உடல் விடுத்து உயிர் மட்டும் எடுத்து சென்றமாயமென்ன
யுகமாகி
போனாலும் உமக்காக காத்திருப்பேன்
யெனும்
நம்பிக்கையில் தானோ ...!!
உம்
வேஷமற்ற பாசம் நானறிவேன்
மாயமாகி
போன மாயவனே மறக்காமல் வந்துவிடு
வரும்
வரை நானிருப்பேன் வெறும் கூ டு கொண்டு உயிர் தின்றவனே
எம்
கார் கூந்தலிலும் கவிதை யெழுத காத்திருந்த
காதலை
சிதைத்து விடாதேயும்...!!
காதலுடன்
பூங்குழலி....
No comments:
Post a Comment