Monday, December 24, 2012

சிவந்த பாதங்களில்


சிவந்த பாதங்களில் கொடியென
படர்ந்திருக்கும் சலங்கையில் கோர்த்திருக்கும்
முத்துகளும் உம் பெயரையே கவிபாடி கொண்டிருகிறது...!!

ஏந்திழையின் நதியென வளைந்தாடும் சிற்றிடையை
பற்றியிருக்கும் உம் மென் கரமோ ஒட்டியணாம் ?
நங்கை யெம் மடல் களில் ஆடும் காதணியும்
உனை நினைத்தே பதம் பிடிக்கறது..!!

சிறகுக் கைகளைசிலிர்த்தாடும் யெம் விரல்களும்
உம் நினைவுகளை முத்திரையை
பதித்து விடுகிறது யெனை அறியாமல்
நிதமும் காற்றில் கலந்திருக்கும்..!!

உம் நினைவுகளோடு ஆடிகொண்டடிருக்கும்
எம் விழிகளில் உமை விதைத்து விட்டு
இமை மூட சொல்வது நியாயமா ..??

காதலுடன் பூங்குழலி ...

No comments:

Post a Comment